பிராங்கோ மூலக்கல் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது

கோட்டயம், : தன்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கேரளாவில், கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்த வழக்கில், பிஷப் பிராங்கோ மூலக்கல் மீது மற்றொரு கன்னியாஸ்திரி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில், கடந்த, 2014-ம் ஆண்டு முதல், 2016-ம் ஆண்டு வரை பிஷப்பாக இருந்தவர், பிராங்கோ மூலக்கல், 55. பின், பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள தேவாலயத்தின் பிஷப்பாக, இடமாற்றம் செய்யப்பட்டார். குருவிளங்காடு தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரை, பிராங்கோ மூலக்கல் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.